சட்டவிரோதமானமுறையில்
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட
தங்க ஆபரணங்களுடன் 4 பெண்கள் கைது
சட்டவிரோதமானமுறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன்,நேற்று (22) இரவு, நான்கு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்,
பிலியந்தலை, பத்தரமுல்லை,முல்லேரியா மற்றும் பம்பலப்பிட்டி
ஆகிய பகுதிகளைச்
சேர்ந்த, 61,67,53,46 வயதுகளையுடைய பெண்கள்
என, கட்டுநாயக்க
விமான நிலைய
சுங்கப் பிரிவினர்
தெரிவித்துள்ளனர்.
இவர்கள்,சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குச் சென்று இரவு 08
மணியளவில், மும்பையிலிருந்து புறப்பட்ட, ஜெட் எயா வேஸ்
9 W 255 விமானம்
மூலம், கட்டுநாயக்க
விமான
நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கைது
செய்யப்பட்ட குறித்த பெண்கள் நால்வரும், தாம்
அணிந்திருந்த ஆடைகளுக்குள் மிகவும் சூட்டுமமான முறையில்,
தங்க ஆபரணங்களை மறைத்து
எடுத்து
வந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து,
95,71,320 ரூபாய் பெறமதியான தங்க ஆரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக,
சுங்கப் பிரிவினர்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.