பஸ்ஸுடன் லாரிமோதிய விபத்தில் 4 பேர் பலி
நியூ மெக்சிகோவில் சம்பவம்
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நகரில் பயணிகள் சென்ற பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி பயணிகள் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதில் 49 பேர் பயணம் செய்தனர்.
நியூ மெக்சிகோ நகர் அருகில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வந்த டிராக்டர் டிரெயிலர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்ஸின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. பஸ்ஸில் உடல் நசுங்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.