கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலிருந்து
இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி
- பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம்
பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இரணைமடு
நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி
மக்கள் பொலிஸாருக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து
சடலம் கிடந்த
பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சோதனையின் போது,
சடலத்தின் அருகிலிருந்து
சிவில் பாதுகாப்பு
படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை
என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்
சுமார் இருபது
வயதானவர் எனவும்,
சடலத்தின் முகப்
பகுதியில் காயங்கள்
இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை
உயிரிழந்த பெண்
தொடர்பான விபரங்கள்
எதுவும் தெரியவராத
நிலையில் சம்பவம்
தொடர்பான மேலதிக
விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.