200 அடி பள்ளத்தில் பாய்ந்த வான்!

கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்ற வான் ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதியின் நாவலப்பிட்டி கொன்தென்னாவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வானை செலுத்திய சாரதி மற்றும் மேலும் இரு நபர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top