புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சியின்
தலைவர் இன்பராசாவுக்கு எதிராக
சம்மாந்துறை பொலிஸில்
பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்களிடத்தில் இருப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்ட புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக சம்மாந்துறை பொலிஸிலும் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை பொலிஸில், இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தல் என்ற காரணத்தின் படி CIB 1- 310/347 என்ற இலக்கத்தின் கீழ் இம்முறைப்பாடானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் காரைதீவு, மாளிகைக்காடு மேற்கைச் சேர்ந்த காரதீவு
பிரதேச சபை உறுப்பினரான அப்துல் ரஸ்ஸாக் முஹம்மது பஸ்மீர் என்பவரால் இன்று இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.