ஐ.நா.
சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இன்று
(30) அதிகாலை நாடு திரும்பினார்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில்
பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30)
அதிகாலை நாடு திரும்பினார்
கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி இலங்கையிலிருந்து சென்ற
ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற அதன் பிரதான
கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.
அத்துடன் செப்டெம்பர் 24 இல் இடம்பெற்ற, நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டிலும், உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான பூகோள நடவடிக்கைகளுக்கான விசேட சந்திப்பிலும்
ஜனாதிபதி பங்குபற்றினார்.
செப்டெம்பர் 25 இல் இடம்பெற்ற அதன் பிரதான கூட்டத்தொடரில்
உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை
நோக்கிய செயற்றிட்டங்கள் தொடர்பில் விளக்கினார்.
இதன்போது பல்வேறு அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து
கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.