ரயிலுடன் கார் மோதி கோர விபத்து
நான்கு பெண்கள் பரிதாபகமாக பலி
வவுனியா - ஓமந்தை பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பிரதேசத்தில்
ரயிலுடன் காரொன்று
மோதியதில் காரில்
பயணித்த நால்வர்
உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து
வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று
காலை 10.30 மணியளவில் பந்திரின்கேந்திரக்குளம்
பிரதேசத்திலுள்ள, பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊடாக
பயணித்த காரே
ரயிலுடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இருவர்
படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரின் சாரதியுன் சிறுவன் ஒருவனும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில்
இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.