மேன்முறையீட்டு மனுவைத்
தாக்கல் செய்தார் ஞானசார தேரர்
தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 6 வருட சிறை
தண்டனையை ரத்துச் செய்யுமாறு கோரி பொதுபல
சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றில் மனுவொன்றை
தாக்கல் செய்துள்ளார்.
ஞானசாரரின்
மனு, இம்மாதம்
28 ஆம் திகதி
உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் ஞானசார
தேரர் மேன்முறையீட்டு
நீதிமன்றிலும் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த போதிலும்,
அதனை நீதிமன்றம்
நிராகரித்துள்ளது.
நீதிமன்றத்தை
அவமதித்த குற்றச்சாட்டின்
பேரில், பொதுபல
சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, 6 வருட கடூழியச்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.