முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
இந்திய காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு

இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புரமணிய சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு சுப்புரமணிய சாமி அழைப்பு விடுத்து இருந்தார்.
அவரது அழைப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ டெல்லி சென்றடைந்தார். அதையடுத்து நேற்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிய மஹிந்த ராஜபக், பல்வேறு தலைவர்களை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top