இலங்கையின் ஜனாதிபதியாக விரைவில்
பொறுப்பேற்கப்  போகிறவர் மஹிந்த
கருத்தரங்கில் இப்படி அறிமுகப்படுத்தியிருக்கிறார்
சுப்ரமணியன் சுவாமி


இலங்கையின் ஜனாதிபதியாக விரைவில் பொறுப்பேற்கப் போகிறவர் என்று  புதுடெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில் மஹிந்த ராஜபக்ஸவை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
சுப்ரமணியன் சுவாமி தலைமை வகிக்கும் விராட் ஹிந்துஸ்தான் சங்கமே, நேற்றைய கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது.
இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த சுப்ரமணியன் சுவாமி, மஹிந்த ராஜபக்ஸவை அறிமுகப்படுத்தி வைத்த போதே, விரைவில் இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கப் போகிறவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்னணித் தலைவரான மஹிந்த ராஜபக்ஸ, விரைவில், இலங்கையின் ஜனாதிபதியாகவுள்ளவர்.
தீவிரவாதத்துக்கு எதிராக அவர் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தவர். அதனை தனது நாட்டில் இருந்து வேரோடு அகற்றியவர்.
அதன் விளைவாக, இலங்கை இன்று அனைத்துலக முதலீடுகள் விரும்பப்படும் ஒரு இடமாக மாறியிருக்கிறதுஎன்றும் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top