சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம்
நாளை அவசரமாகக் கூடுகிறது


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை 11 ஆம் திகதி அவசரமாக கூடவுள்ளதாக, கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், உம்ரா கடமையை நிறைவேற்ற புனித மக்கா சென்றிருந்த நிலையில், நாளை, நாடு திரும்பவுள்ளனர்.

நாடாளுமன்றம் நேற்று, நள்ளிரவு கலைக்கப்பட்ட நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், இக்கூட்டம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட உயர்மட்டத்தரப்பினர் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர் எனக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top