2 1/2 கிலோ தங்க நகைகளுடன்
மும்பாயிலிருந்து வந்த
3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது
சுமார்
இரண்டடை கிலோ
தங்க நகைகளுடன்
மும்பாயிலிருந்து வந்த 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர்
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று
(22) இரவு 8.00 மணியளவில், 9W252 எனும் மும்பாயிலிருந்து வந்த விமானம் மூலம் கட்டுநாயக்கா
விமான நிலையம்
வந்தடைந்த குறித்த
நால்வருமே சுங்கத்
திணைக்கள அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டுள்ளதாக,
சுங்கத் திணைக்களத்தின்
பணிப்பாளரும் அதன் பேச்சாளருமான சுனில் ஜயரட்ண
தெரிவித்துள்ளார்.
கொழும்பைச்
சேர்ந்த சந்தேகநபர்கள்,
2.5403 கிராம் தங்க நகைகளை இவ்வாறு சட்டவிரோதமாக
கடத்தி வந்துள்ளனர்.
குறித்த
நகைகளின் பெறுமதி
ரூபா ஒரு
கோடியே 40 இலட்சத்திற்கும்
அதிகம் (ரூ.
14,099,570) என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.