முப்படைகளின் அலுவலக பிரதானிக்கு
டிசம்பர் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியல்

“முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பிணை கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் அவரை டிசம்பர் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

2008-2009 காலப்பகுதிக்குள் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரட்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று வந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top