அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில்
பார்வையிட்டார் மஹிந்த
ஞானசார தேரரையும் சந்தித்துள்ளார்
கொழும்பில்
11 பேர் கடத்தப்பட்டு
காணாமல் ஆக்கப்பட்ட
வழக்கில், கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர
விஜேகுணரத்னவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சந்தித்து
நலன் விசாரித்துள்ளார்.
மஹிந்த
ராஜபக்ஸ நேற்று,
அட்மிரல் ரவீந்திர
விஜேகுணரத்ன தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு
அவரைப் பார்வையிட்டுள்ளார்.
இதனை
மஹிந்த ராஜபக்ஸவின்
ஊடகச் செயலர்
றொகான் வெலிவிட்ட
உறுதிப்படுத்தியுள்ளார்.
வெலிக்கடைச்
சிறையில், அட்மிரல்
விஜேகுணரத்னவை பார்வையிடச் சென்ற மஹிந்த ராஜபக்ஸ,
தண்டனைக் கைதிகளாக
தடுத்து வைக்கப்பட்டுள்ள
முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் பொது
பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார
தேரர் ஆகியோரையும்
சந்தித்துள்ளார் என்றும் றொகன் வெலிவிட்ட கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.