படுதோல்வியின் எதிரொலி!
அவசர சந்திப்பில் மைத்திரி - மஹிந்த
நாடாளுமன்றத்தில்
இன்று ஆளுங்கட்சிக்கு
ஏற்பட்ட பாரிய
தோல்வியை அடுத்து,
ஜனாதிபதி - பிரதமர் அவசரமாக சந்திக்கவுள்ளனர்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த
ராஜபக்ஸவுக்கு இடையில் திடீர் கலந்துரையாடல் ஒன்று
இடம்பெறவுள்ளது.
இன்னும்
சற்று நேரத்தில்
ஜனாதிபதி செயலகத்தில்
இந்த கலந்துரையாடல்
இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது
ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இரண்டு
தரப்பினரும் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக
அரசியல் தகவல்
வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில்
இன்று இடம்பெற்ற
தெரிவுக் குழு
தொடர்பான வாக்கெடுப்பில்
ஆளும் தரப்பு
படுதோல்வி அடைந்திருந்தது.
இன்றைய
தினம் வரலாற்றில்
முதன்முறையாக ஆளும்கட்சி, எதிர்க்கட்சிக்கு
பயந்து, நாடாளுமன்றத்திலிருந்து
வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.