முப்படைகளின் அலுவலக பிரதானி சற்று முன்னர் கைது
பாதுகாப்பு
படைகளின் பிரதானி
அட்மிரல் ரவீந்திர
விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப்
பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 மாணவர்கள்
கடத்தல் விவகாரத்தில்
பிரதான சந்தேகநபர்
நேவி சம்பத்துக்கு
அடைக்கலம் கொடுத்தமை
தொடர்பில் குற்றச்சாட்டுக்கு
உள்ளாகியுள்ள ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று காலை
10.00 மணிக்கு சி.ஐ.டி.யின்
சமூக கொள்ளை
தொடர்பிலான விசாரணைப் பிரிவில் அவரை ஆஜராகுமாறு
அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும்
எனக்கு எந்த
உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை.எனினும் இன்று
நீதிமன்றில் ஆஜராகத் தயார் என தெரிவித்திருந்தார்.
அதன்படி அவர்
இன்று நீதிமன்றில்
ஆஜரானார்.
நீதிமன்ற
விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் ரவீந்திர
விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு
படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்க அவரது
சட்டத்தரணிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.