இலங்கை ரூபா 30 இலட்சம், 2,410 தினார் உடன் இருவர் கைது
ஒருவர் குவைத் பிரஜை மற்றவர் இலங்கை பிரஜை



சட்டவிரோதமாக குவைத்துக்கு 30 இலட்சம் ரூபாய் பணத்தை கொண்டு செல்ல முயற்சி செய்த இலங்கை பிரஜையொருவரும், குவைத் பிரஜையொருவரும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் நேற்று 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரிடமிருந்தும் இலங்கைப்பணம் 30 இலட்சம் ரூபாயும், குவைத் டினார் 2,410 உம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்று பிற்பகல் 6.15 மணி அளவில் UL226 எனும் விமானம் மூலம் குவைத் நாட்டிற்கு செல்ல முயற்சித்த வேளையில் அவர்களிடமிருந்து குறித்த பணம் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இவர்கள் தாம் கணவன்-மனைவி என தெரிவித்துள்ளதாகவும், குறித்த பெண் மாத்தளையைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top