கண்டி மாவட்ட சுதந்திர
சமாதான நீதவான்கள் பேரவையின்
வருடாந்த ஒன்றுகூடலும்,
கௌரவிப்பு விழாவும்
கண்டி
மாவட்ட சுதந்திர
சமாதான நீதவான்கள்
பேரவையின் வருடாந்த
ஒன்றுகூடலும், கௌரவிப்பு விழாவும் கண்டி தர்மராஜ
கல்லூரி கேட்போர்
கூடத்தில் நேற்று(21/12/2014)
நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர்
தி.மு.
ஜயரத்னவும் கௌரவ அதிதியாக ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நீதியமைச்சயமைச்சருமான
ரவூப் ஹக்கீமும்
கலந்து கொண்டு
கண்டி மாவட்டத்தின்
பல துறைசார்ந்தவர்களுக்கான
பாராட்டுப் பத்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.
நீதியமைச்சரின்
வெகுசன தொடர்பு
இணைப்புச் செயலாளர்
மஹிலால் டி
சில்வாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் அமரபுர
மஹா நிகாயவின்
மஹாநாயக்க தேரர்
அதிசங்கைக்குரிய தவுல்தென ஸ்ரீ ஞானிசார தேரர்
உள்ளிட்ட பௌத்த
பிக்குகளும், மத்திய மாகாண முதலமைச்சர் சரத்
ஏக்கநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், பெரும்
எண்ணிக்கையான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.