இயக்குனர் கே.பாலச்சந்தர் உயிரிழந்தார்
மருத்துவமனையில்
அன்னாரின் உயிர் பிரிந்தது
திரைப்பட
இயக்குநர் கே.
பாலசந்தர் (வயது84) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்
இன்று இரவு
சுமார் 7.30 மணியளவில் உயிரிழந்தார் என அறிவிக்கப்படுகின்றது.
இருதயக்
கோளாறு காரணமாக
பை-பாஸ்
அறுவைச் சிகிச்சை
செய்து கொண்ட
பாலசந்தருக்கு, கடந்த வாரம் திடீரென மூச்சுத்திணறல்
ஏற்பட்டது.
இதையடுத்து,
சென்னை ஆழ்வார்பேட்டையில்
உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு
முன் பாலசந்தரின்
மகன் கைலாசம்
மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தால், பாலசந்தர் மனதளவில்
பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்து
வந்த பாலசந்தருக்கு,
கடந்த15.12.2014ம் திகதி மாலை திடீரென
சுவாசக் கோளாறு
ஏற்பட்டது.தொடர்ந்து
சுவாசக் கோளாறு
நீடித்ததால் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சைக்குப்
பிறகு உடல்
நிலையில் சீரான
முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்களின்
தொடர் கண்காணிப்பில்
இருந்து வந்த
அவருக்கு
திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது இதனையடுத்து
அவருக்கு செயற்கை
சுவாசம் அளிக்கப்பட்டு
தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று
இரவு உயிரிழந்தார்.
அன்னாரின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரை நட்சத்திரங்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.