அகில இலங்கை மக்கள்
கங்கிரஸ் கட்சியின்
செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்
நடைபெறவுள்ள
ஜனாதிபதி தேர்தலில்
யாருக்கு ஆதரவளிப்பது
என்பது தொடர்பில்
இன்றைய தினம்
அறிவிக்கப்படும் என அகில இலங்கை மக்கள் கங்கிரஸ்
கட்சியின் செயலாளர்
வை.எல்.எஸ் ஹமீட்
தெரிவித்துள்ளார். நாம் இந்த நிமிடம்
வரையில் எந்தவொரு
தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. நேற்றைய தினம் எமது
கட்சியின் உயர்பீடம்
கூடியிருந்தது. இதன் போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்
தேர்தலில் யாரை
ஆதரிப்பது தொடர்பாக
பல்வேறு மட்டங்களில்
நாம் கலந்துரையாடினோம். அத்துடன்
எமது கட்சியின்
ஏனைய பிரதிநிதிகளின்
கருத்துக்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியிருந்தோம்.
அதனடிப்படையில் இன்று மாலை எமது கட்சியின்
அரசியல் உயர்பீடம்
மீண்டும் கூடவுள்ளது. இக் கூட்டத்தில் ஜனாதிபதித்
தேர்தல் தொடர்பான
இறுதித் தீர்மானம்
மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.