ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, சசிகலா முக்கிய கடிதம்!

தமிழகத்தின் நலன் கருதி விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரை, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்தார். அப்போது, எம்எல்ஏக்களின் பெரும்பான்மை கடிதத்தை கொடுத்தார். ஆனால், இன்று வரை சசிகலாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனிடையே, பன்னீர்செல்வத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆதரவு பெருகி வருகிறது.


இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், "முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் அளித்து ஏழு நாட்களாகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேச விரும்புகிறேன். தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசன சட்டப்படி ஜனநாயகத்தை காக்க ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top