விளையாட்டு விபரீதமானது
புடவைத்துண்டு கழுத்தில் இறுகி
எட்டு வயது சிறுவனின் உயிர் பிரிந்த பரிதாபம்!
சாய்ந்தமருதில் சம்பவம்
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபை பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் தம்பியுடன் விளையாடிக்கொ ண்டிருந்த சிறுவன் ஒருவனின்
கழுத்தில் எதிர்பாராத
விதமாக புடவைத்துண்டு
இறுகியதில் குறித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம்
அப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு
வயதுடைய ஹஸைப்
ரஷா என்ற
சிறுவனே இவ்வாறு
பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மரணமடைந்துள்ள சிறுவன் சாய்ந்தமருது பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த ஹட்டன் நெஷனல் வங்கியின் முன்னாள்
உத்தியோகத்தரும் தற்போது DFCC வங்கி கிளை
முகாமையாளருமான் ஏ.ஆர்.எம் ஹசான் மக்கள் வங்கியில் கடமையாற்றும் இஸ்ஸத் றீஷா
ஆகியோரின் மூத்த புதல்வராவார்.
இச்சிறுவனின் மரணம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,
தாயும் தகப்பனும் தொழிலுக்கு சென்றிருந்த
நிலையில் அன்று பாடசாலை சென்றிராத ஹஸைப்
ரஷா என்ற
சிறுவனும் அவரது
இளைய சகோதரனுடன்
பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளார்கள்.
இதில்
ஹஸைப் ரஷா
என்ற சிறுவன்
தனது சகோதரனுடன்
வீட்டின் மேல்
மாடியில் சால்வைத்துண்டு
ஒன்றை எடுத்து
சுழற்றி விளையாடிக்
கொண்டிருந்துள்ளார்.
இதன்போது
தவறுதலாக புடவைத்துண்டு
ஹஸைப் ரஷாவின்
கழுத்தில் இறுகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதில்
குறித்த சிறுவன்
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
என தகவல்கள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.