தேசிய தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை

புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்து


தேசிய தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொரியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் சுமார் 190 கோடி ரூபா செலவில் . இந்த தொழில் நுட்பக்கல்லூரியை அமைப்பதற்கான நிதியுதவியினை வழங்கவுள்ளது.

இதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நேற்று கைச்சாத்திட்டன.

தொழில்நுட்ப கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை ஒன்றரை வருடங்களுக்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பாடவிதானத்தில் தொழில்நுட்ப பாடம் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பாடத்தை போதிப்பதற்கு கூடுதலான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த தேவையை நிறைவேற்ற புதிய தொழில்நுட்ப கல்லூரி உறுதுணையாக அமையும் என்று கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது பாடசாலைகளில் அமுலாகும் மாணவர்; மதிப்பீட்டு முறைக்கு பதிலாக எளிமையான முறை அமுலாக்கப்படவுள்ளது. சமகால முறை பற்றிய முறைப்பாடுகளை பரிசீலித்த பின்னர் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top