மதிப்பும், மரியாதையும்
குறைக்கப்பட்டுள்ள
முஸ்லிம்.காங்கிரஸின் செயலாளர் பதவி
(படங்கள் இணைப்பு)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு
அடுத்த நிலையிலுள்ள பதவியாக இருந்து வந்த முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பதவி இன்று வெறும் எடுபிடிப் பதவியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அப்பதவியை வகிப்பவர் முக்கியத்துவம் இல்லாத ஒருவராக சபையில் அமரவைக்கப்படுகின்றார்
எனவும் அம்பாரை
மாவட்ட கட்சி ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
முஸ்லிம்.காங்கிரஸின் செயலாளர் நாயகமாக எம்.ரி. ஹசனலி பதவி வகித்த போது, கட்சித் தலைவருக்கு அடுத்த ஆசனத்தில் அவர் அமரவைக்கப்படுவார். கட்சியின் நடவடிக்கையில்
முக்கியத்துவம் பெறுவார்.
ஆனால், இன்று அவர் வகித்த
பதவியை வகிப்பவர் தலைவரின் செயலாளராக மாறி முக்கியத்துவம் இல்லாத ஒருவராக சபையில் அமரவைக்கப்படுகின்றார்.
முஸ்லிம்.காங்கிரஸின் செயலாளர் நாயகம் பதவிக்கு, அப்போது இருந்த மதிப்பும், மரியாதையும் தற்போது இல்லாமலாக்கப்பட்டிருப்பதாகவும் கட்சி ஆதரவாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.