கிழக்கு முதலமைச்சரின் வாக்குறுதிக்கமைய
மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக
மீண்டும் விஜயானந்தமூர்த்தி?
(அஸ்லம்)
மூதூர்
வலயக்கல்விப்பணிப்பாளராக கிழக்கு மாகாணக்கல்வித்
திணைக்களத்தில் கடமையாற்றும் திரு. ஏ.விஜயானந்தமூர்த்தி
மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக
கிழக்கு மாகாணக்கல்வி
அமைச்சு வட்டாரங்களிலிருந்து
தெரிய வருகிறது.
தற்போது
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளராகக் கடமையாற்றும் திரு. எம்.கே.எம்.மன்சூih
இடமாற்றம் செய்யுமாறு
மூதூர் வலய
ஆசிரியர்கள் மேற்கொண்ட சுகவீன லீவுப் போராட்டம்
மற்றும் ஆர்ப்பாட்டப்
பேரணிகளை அடுத்து
கிழக்கு மாகாண
முதலமைச்சர் அளித்த வாக்குறுதிக்கமைய இவ்விடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத்
தெரிய வருகிறது.
திரு.
விஜயானந்தமூர்த்தி மூதூர் கல்வி
வலயத்தில் வலயக்கல்விப்
பணிப்பாளராகக் கடமையாற்றிய சமயம் சகல இன ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் நன்மதிப்பையும்,
ஆதரவையும் பெற்றவர்.
இவர்
மூதூர் வலயக்கல்விப்
பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்படவிருப்பது
குறித்து ஆசிரியர்
சங்கங்களும், இலங்கை கல்வி நிருவாக சேவை
சங்கமும் பாராட்டுத்
தெரிவித்துள்ளதுடன் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.