ஏறாவூர் இரட்டைக் கொலைச் சந்தேக நபர்களின்
விளக்கமறியல் எதிர்வரும்
8ஆம் திகதிவரை நீடிப்பு
ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 6 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று 22 ஆம் திகதி இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோதே, இவர்களுக்கான விளக்கமறியலை நீதிபதி நீடித்துள்ளார்.
ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமான மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்;டிருந்தன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 6 சந்தேக நபர்களின் விசாரணைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.