இரண்டு குழந்தைகளை சூடாக இருக்கும் காரில் தாய் விட்டு சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் Cynthia Marie Randolph (24) இவருக்கு Juliet Ramirez (2) என்ற மகளும், பிறந்து 16 மாதங்களே ஆன Cavanaugh Ramirez என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று, Cynthiaவின் இரு குழந்தைகளும் காரில் உட்கார்ந்து விளையாடியுள்ளனர். இதை பார்த்து கோபமடைந்த Cynthia, அவர்களுக்கு தண்டனை தர எண்ணி இருவரையும் தன் காரின் உள்ளே தனியாக உட்கார வைத்து விட்டு சென்றுவிட்டார். பிறகு மூன்று மணி நேரம் கழித்து Cynthia, கார் அருகில் சென்று பார்த்த போது உடலில் காயங்களுடன் இருவரும் உயிரிழந்து சடலமாக இருந்துள்ளனர். இதையடுத்து பொலிசார் Cynthiaவை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன் குழந்தைகள் தானாக காரை லாக் செய்து கொண்டதாக முதலில் கூறியுள்ளார். அதன்பின்னர், குழந்தைகளுக்கு தண்டனை தரும் விதமாக காரில் தனியாக விட்டு சென்றதை ஒப்பு கொண்டுள்ளார். மேலும், தனது மகள் Juliet காரிலிருந்து வெளியில் வந்து விடுவார் என தான் நினைத்ததாகவும் பொலிசாரிடம் Cynthia கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top