கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று இடம்பெறும் புனித நோன்புப் பெருநாள் நபி வழித் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்ஷா அழ்ழாஹ் இம்முறையும் இடம்பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாயில்களின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
பெருநாள் தினம் காலை 6.30 மணிக்கு ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெறும் இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஏ.Bவி. பிர்னாஸ் (மன்பஈ) அவர்கள் நடாத்தி வைக்கவுள்ளார்கள்.
இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகும் இந்நோன்புப் பெருநாள் தொழுகைக்கு வருகின்ற அனைவரும் வீட்டில் வுழு செய்துகொண்டு உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு நிர்வாகத்தினர் கட்டாய வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இம்முறையும் வழமைபோன்று கல்முனைப் பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நபிவழி பெருநாள் திடல் தொழுகையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(எஸ்.அஷ்ரப்கான்)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.