ரமழான் பண்டிகை, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என பிராத்திக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எனது இதயங்கனிந்த ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள். புனித ரமழான் மாதத்தின் நிறைவினை நினைவுகூரும் முகமாக இந்த நாளை நாம் கொண்டாடுகின்றபோது, இப்பண்டிகையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், சகோதரத்துவ உணர்வோடு நாம் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை இல்லாதவர்கள் மேல்காட்டும் கரிசனையையும் எமது சிந்தையில் கொள்வோமாக.
இந்தப் பெருநாளை கொண்டாடும் இத்தருணத்தில், எமது தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோமாக.
இந்த ரமழான் பண்டிகையானது, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.