முஸ்லிம்கள் இப்தார் நடாத்த வைத்திருந்த நிதியை வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உதவினர் எனவும், இந்த நன்கொடைகள் கிராமப்புறங்களில்
பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே பெரும்பாலும் கிடைத்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார்.
பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்த அரசாங்கம் பாடுபடுகிறதெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் சமீபகாலங்களில் வெள்ளப் பாதிப்பை கருத்திற்கொண்டு, சில முஸ்லிம்கள் இப்தார் நோன்பு துறக்கும் வைபவத்திற்காக பணம் செலவழிப்பதை தவிர்த்தார்கள். அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கினார்கள். இவை சிங்கள மக்கள் கூடுதலாக வசிக்கும் கிராமங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதென்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணிகளில் சட்டவாட்சியின் பங்கு முக்கியமானது. இதனை சகல மதங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.இல்லறத்தில் அல்லது துறவரத்தில் இருப்பவர் எவரும் சட்டத்திற்குப் புறம்பாக செயற்பட முடியாது. அனைவரும் சட்டத்தின் பிரகாரம் செயற்பட கடமைப்பட்டுள்ளார்கள். சட்டத்தை முறையாக அமுலாக்கி மக்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலம் உண்மையான சமாதானம் ஏற்படும் என்றும் பிரதமர் அங்கு கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.