ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) முற்பகல் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனைக்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். மருத்துவமனை வளாகத்தில் தரித்திருந்து மருத்துவமனைச் செயற்பாடுகளை ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி அவர்கள், விசேட டெங்கு சிகிச்சை அலகுக்குப்பொறுப்பான மருத்துவ நிபுணருடன் கலந்துரையாடினார். நீர்கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்தமையால் தற்போது மருத்துவமனை டெங்கு அலகில் நெருக்கடி நிலவுகிறது. அந்த அலகை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் மருத்தவமனையின் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்த ஜனாதிபதி அவர்கள் அதற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியதுடன், சுகாதார அமைச்சுக்குப் புறம்பாக உள்ளூராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தனது நேரடி பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் டெங்கு நோயாளர் விடுதிக்குச் சென்று செயற்பாடுகளை ஜனாதிபதி அவர்கள் கண்காணித்ததுடன் நோயாளர்களுடனும் உரையாடினார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்கஅமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் பிரதேசமக்கள் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top