ஏறாவூரில்
தாய் மற்றும்
மகள்
படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
அறுவரையும் ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு, மேலதிக நீதவானும் மேலதிக
மாவட்ட நீதிபதியுமாகிய
முஹம்மத் இஸ்மாயில்
முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டார்.
இவர்களை,
ஏறாவூர் சுற்றுலா
நீதிமன்றத்தில், இன்று (23) ஆஜர்படுத்தியபோதே,
மேற்கண்ட உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
ஏறாவூர்
நகர பிரதேசத்தில்,
முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள
வீட்டில் வசித்துவந்த
தாயான
நூர்முஹம்மது உஸைரா (வயது
56) அவரது திருமணமாகிய
மகளான ஜெனீராபானு
மாஹிர் (வயது
32) ஆகியோர் கடந்த செப்டெம்பர் 11ஆம்
திகதி படுகொலை
செய்யப்பட்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.