நோன்புப் பெருநாள் தொழுகையின்போது கார் ஒன்றை மோதவிட்டு ஏற்படுத்தப்பட்ட விபத்தில் ஆறு பேர் படுகாயம்
நோன்புப் பெருநாள் தொழுகை நிறைவடைந்து வெளியே வந்தவர்கள் மீது வாகனம் ஒன்றை மோதவிட்டு ஏற்படுத்திய விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவிலுள்ள விளையாட்டு மையத்திற்கு வெளியே இன்று காலை 9.14 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 42 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது பயங்கரவாத சம்பவம் என இன்னும் உறுதி செய்யப்படவில்லை என Northumbria பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Newcastle மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக மேலதிக பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மசூதியில் இடம்பெற்ற தொழுகை நிறைவடைந்தவுடனே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக Newcastle மசூதி பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனில் தொழுகை நிறைவடைந்து மசூதிக்கு வெளியே இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.