மாலபே
நெவில் பெர்ணாண்டோ வைத்தியசாலையை
அரசுடமையாக்க அமைச்சரவை இன்று (27) தீர்மானித்துள்ளது.
இன்று
நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்தில் இதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாலபே
தனியார் மருத்துவக்
கல்லூரியை மூடுமாறு
வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
அத்துடன்,
அரச மருத்துவ
அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை
முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த
நிலையில், இன்றைய
அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக
மேற்படி தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று சைட்டத்தின் தலைவர்
டாக்டர் நெவில்
பெர்ணாண்டோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.