ஜனாதிபதியின்
புதிய செயலாளராக
கிழக்கு மாகாண
ஆளுனர் ஒஸ்டின்
பெனேண்டோ நியமிக்கப்படவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின்
செயலாளராக மூன்று
தினங்களுக்குள் தனக்கு நியமனம் கிடைக்கும் என
கிழக்கு மாகாண
ஆளுனர் ஒஸ்டின்
பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர்
அரச நிருவாக
சேவை அதிகாரியாவர்.
இவர் நாட்டின்
பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
நேற்று
இராஜினாமா செய்த
ஜனாதிபதி செயலாளர்
பி.பீ.
அபேகோனின் இடத்துக்கே
இவர் நியமிக்கப்படவுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக
நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று
தூதுவர்களும், ஒரு உயர்ஸ்தானிகரும் கடந்த 28 ஆம் திகதி முற்பகல்
கொழும்பு கோட்டையிலுள்ள
ஜனாதிபதி மாளிகையில்
தமது நியமனக்
கடிதங்களை ஜனாதிபதி
கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்களிடம்
கையளித்தனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளருக்குப் பதிலாக, கிழக்கு மாகாண
ஆளுநர் ஒஸ்டின்
பெர்ணாண்டோ பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.