ஓட்டமாவடி - கேணிநகர் கிராமத்தை சேர்ந்த

19 வயதான குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பலி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கருகிலுள்ள குளத்தில், மீன் பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர்  ஒருவர் இன்று (27) காலை நீரில் மூழ்கி காணமல் போன நிலையில், இன்று மாலை 02.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஓட்டமாவடி - கேணிநகர் கிராமத்தை சேர்ந்த  19 வயதான முஸ்தபா லெப்பை ரிப்கான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகரை, புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள கேணிமடு குளத்தில் மீன் பிடிப்பதற்காக இன்று காலை 9.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இதன்போது 10 மணியளவில அப்பகுதிக்கு வந்த மீனவர் ஒருவர், குளத்தில் ஒருவர் மூழ்குவதையும், அவர் காப்பாற்றுமாறு சைகை காட்டியதை அடுத்து அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்தப்போதும் காப்பற்றமுடியாமல் போன நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top