சவூதி அரேபியா கூட்டுப்படை நடத்திய
வான்வெளி தாக்குதலில்
அப்பாவி பொது மக்கள் 25 பேர் பலி
சவூதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏமன் நாட்டு மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறைந்துள்ள பகுதியின் மீது சவூதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அதே பகுதியில் வசித்து வந்த குழந்தைகள் உட்பட 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 15-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 48 மணி நேரத்தில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.