ஐதேகவில்
மீண்டும் இணைகிறார் கெஹலிய ரம்புக்வெல?
ஐக்கிய
மக்கள் சுதந்திர
முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல
மீண்டும் ஐதேகவில்
இணைந்து கொள்ளவுள்ளார்
என்று அரசியல்
வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கண்டியில்
எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐதேகவின்
உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், கெஹலிய
ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்வார்
என்றும் கூறப்படுகிறது.
2001-2004 காலப்பகுதியில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப்
பதவி வகித்த
கெஹலிய ரம்புக்வெல,
பின்னர் மஹிந்த ராஜபக்ஸ அரசுக்குத் தாவி
அமைச்சர் பதவியைப்
பெற்றார்.
அவர்
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி
வகித்திருந்தார்.
தற்போது
மஹிந்த ராஜபக்ஸ ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள
கெஹலிய ரம்புக்வெல
மீண்டும் ஐதேகவில்
இணைந்து கொள்ளவுள்ளதாகவும்
அவருக்கு அமைச்சர்
பதவி வழங்கப்படவுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.