தேர்தல் பிரசாரங்களில் அரச வாகனங்களுக்குத் தடை

ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்த

அரசு யாருக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை

தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு



அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அலுவலக பணியாளர்கள் அல்லது வேறு எந்த நபரோ அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளின் பொறுப்பு என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுரை கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வாகனங்களைத் தவிர வேறு எந்த அரச வாகனங்களும் தேர்தல் காலங்களில் பயன்படுத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பதிவு செய்யப்பட்ட இலக்கங்களுடன் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான அறிவுரைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்காக விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்பவற்றைப் பயன்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top