புரிந்துணர்வு உடன்பாடு நேற்று

நள்ளிரவுடன் காலாவதியானது

கூட்டு அரசு நிலைக்குமா?


கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.
                                        
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திட்டிருந்தன.

இந்த புரிந்துணர்வு உடன்பாடு கடந்த செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியாகியிருந்தது. இந்த நிலையில், இந்த உடன்பாட்டை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவு செய்யப்பட்டது.

நீடிப்புச் செய்யப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.

எனினும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டை நீடிப்பதாஇல்லையா என்று இரண்டு கட்சிகளும் இன்னமும் முடிவு செய்யவில்லை.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட ஐதேகவின் பிரதி பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா- நீடிப்பதா என்று கட்சிக்குள் இன்னமும் கலந்துரையாடப்படவில்லை.


உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி இறுதி முடிவை எடுப்பார்கள்என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top