புளொட்டின்
முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில்
துப்பாக்கிகள்,
வாள்கள் மீட்பு!
புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த
வீட்டிலிருந்து துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ஆயுதங்களைப் பதுக்கிவைத்திருந்தார் என்ற
குற்றச்சாட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக
யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (19) தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள
வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் உரிமையாளர்
வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வீட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்
வசித்து வந்ததோடு, அவர் அங்கிருந்து
வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம்
நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததோடு, அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்றுமாறு விடுக்கப்பட்ட
நீதிமன்ற கட்டளையின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸார் அங்கு சென்றனர்.
இதன்போது, அங்குள்ள பொருட்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட பொலிஸார், அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் ஏகே 47 துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, அவற்றிக்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 4 மற்றும் 2 வாள்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச்
சேரந்த சிவகுமார் (55) எனும் சந்தேகநபர்
கைது செய்யப்பட்டார்.
ரி-56 ரக துப்பாக்கி – 01, மகசின்கள் – 06, ரவைகள் –
396, கைத்துப்பாக்கி –
01, மகசின்கள் – 03, கோல்சர் – 02, தொலைத்தொடர்பு சாதனங்கள் – 02, வாள்கள் – 02 என்பன
இங்கிருந்து மீட்கப்பட்டன.
தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.