மத்திய வங்கி பிணை முறி மோசடி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

இன்று அல்லது நாளை



மத்திய வங்கி பிணைமுறி மோசடி  தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அச்சிடப்பட்டு வரும் நிலையில், இந்த அறிக்கை இன்று அல்லது நாளை அதிபரி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 27ஆம் திகதி இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒக்டோபர் 27ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில், பல்வேறு தரப்புகளின் கோரிக்கைகளை அடுத்து, அதன் விசாரணைகள் நீடிக்கப்பட்டன.

120 நாட்கள், 65 சாட்சிகளிடம் இருந்து ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளது,

நாளையுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையிலேயே அதன் இறுதி அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.


இந்த அறிக்கை இலங்கை அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top