ஆற்றுக்குள்
பஸ் கவிழ்ந்து 32
பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 32 பேர் பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, "கிழக்கு ராஜஸ்தானில் சவாய் மாந்தோபூர் நகரில் 45 பயணிகளுடன் வந்த தனியார் பஸ் இன்று (சனிக்கிழமை) காலை பனாஸ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆற்றில் மூழ்கி 32 பேர்
பலியாகினர். 3 பேர் காணமல் போயினார். காணமல்போனவர்களை தேடும்
பணி மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
அதிகாலை புகைமூட்டம் காரணமாக பஸ்ஸை வேகமாக ஓட்டிவந்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து வாகனம் விலகியதன்
காரணமாக பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றிற்குள் விழுந்தது. இதனால் பஸ்
தண்ணீரில் மூழ்கியது. உள்ளே இருந்த
பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர். இவ்வாறு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.