தாய் வீடு வந்த குடும்பப் பெண்
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டார்
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுந்தரலிங்கம் சிவகுமாரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்
திருமணம் முடித்து ருவன்புர பகுதியில் வசித்துவந்த குறித்த பெண் தாயார் வீட்டிற்கு வந்திருந்த நிலையிலே நீர்த்தேக்க கரையோர பகுதியில் இன்று (30) சடலமாக மீட்கப்பட்டார்.
நோயினால் பாதிக்கப்படிருந்த குறித்த பெண்ணிண் பாதணிகள் கரையோரமிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட சடலத்தை, ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்கு நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்தாகவும் மேலதிகவிசாரணை தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.