வேட்பாளர்களில்
அநேகர்
குற்றச்
செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள்
பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல்
செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு
மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
தெரிவித்துள்ளார்.
இத்தகையவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில்
உள்ளதாகவும் தகவல்கள் ஊர்ஜீதப்படுத்தப்பட்டதும் அவர்களின் பெயர்களை
வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இத்தகையவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து
கொள்ளுமாறு தாம் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.