நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான
விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
முதல் நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 17இல்




இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் இன்றைய தினம் கலைக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மைத்திரியின் கையொப்பத்துடன் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

மேலும் நடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளதுடன், நாடாளுமன்றின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 17ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top