மக்கள் எதிர்ப்பு வாகன பேரணி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டாது அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டுவதோடு, அதற்கு தாம் வன்மையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி இன்றைய தினம் மக்கள் எதிர்ப்பு வாகன பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

.தே..வின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் நாடாளுமன்றத்தில்  ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கலந்து கொண்டிருந்தனர். நூற்றுக்காண வாகன அணிவகுப்புடன் காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டு கொள்ளுப்பிட்டி சுற்று வட்டாரத்தை கடந்து பயணித்தது.

கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்பாகவிருந்து இன்றைய தினம் மதியம் இரண்டு மணியளவில் ஆரம்பித்த இந்த எதிர்ப்பு பேரணி மாலை நான்கு மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எஸ். சேனாநாயக்கவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் நிறைவுக்கு வந்தது.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top