கிழக்கு கரையில் சூறாவளிக்கான சாத்தியம்
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
பொத்துவிலுக்கு
தென்கிழக்காக ஏறத்தாழ 1050 கிலோமீற்றர் தூரத்தில் மையம்
கொண்டுள்ள தாழமுக்கம்,
இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரும்போது,
சூறாவளியாய மாறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு
வங்காள விரிகுடாவில்
இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய குறைந்த அழுத்தப்
பிரதேசம்
தாழமுக்கமாக விருத்தியடைந்து நேற்று
(25) பிற்பகல்
08.30மணிக்கு வட அகலாங்கு 01.9N இற்கும் கிழக்கு
நெடுங்கோடு 90.1E இற்கும் இடையில் பொத்துவிலுக்கு தென்கிழக்காக
ஏறத்தாழ 1050 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது
அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடிய சாத்தியம்
காணப்படுவதோடு, வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியமும்
காணப்படுகின்றது.
அதேவேளை
இலங்கையின் கிழக்குக் கரையை நோக்கி நகரும்போது சூறாவளி
ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும்,
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.