தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரியான
சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்உயிரிழந்தோ
காணாமல் போயோ
இருப்பதாக
அவரது சகோதரி
தெரிவிப்பு
இலங்கையில்
கடந்த 21ம்
திகதி இடம்பெற்ற
தற்கொலை குண்டுத்தாக்குதல்களை
அடுத்து, அதன்
சூத்திரதாரியான சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்
உயிரிழந்தோ அல்லது காணாமல் போயோ இருப்பதாக
அவரது சகோதரி
தெரிவித்துள்ளார்.
மொஹமட்
ஹாசிம் மதானியா
என்ற அவர்,
சீ.என்.என். ஊடகத்துக்கு
வழங்கிய செவ்வியில்
இதனைக் கூறியுள்ளார்.
கடந்த
வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட
சுற்றிவளைப்பின் போது, சஹ்ரானின் தந்தையும் இரண்டு
சகோதரர்களும் உயிரிழந்தனர்.
அவர்களுடன்
ஆறு சிறார்களும்
உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.