சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத்தந்த
600 பேரை உடனடியாக
நாடு கடத்துமாறு பிரதமர் உத்தரவு



சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத்தந்த 600 இஸ்லாமியர்களை நாடு கடுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இஸ்லாமிய மத்ரசா பாடசாலைகளில் கற்பிக்கும் 600 பேரே இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளனர்.

இலங்கைக்கு வருவதற்கு இவர்களுக்கு எப்படி வீசா வழங்கப்பட்டு வந்தார்கள்? நாட்டில் தங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது யார்? என்ற அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கை ஒன்றை தனக்கு உடனடியாக வழங்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களில் அதிகமானோர் இலங்கையிலுள்ள கடற்கரை பகுதிகளிலேயே வாழ்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்களுக்கு வீசா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது யார் என விசேடமாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top